திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: படைமாட்சி / The Excellence of an Army   

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.



(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.